×

பிரச்சனைகளை திசைதிருப்பும் முயற்சி: காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேர்தலை சுதந்திரமற்ற, நியாயமற்றதாக மாற்ற பிரதமர் மோடியின் அனைத்து முயற்சிகளையும் நாட்டு மக்கள் தீர்மானமாக நிராகரிப்பார்கள். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகள் பெரும் அநீதி நடந்துள்ளது. எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் நாடு புதிய இந்தியா என்கிற மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சமீபத்திய கருத்துக்கள் உண்மை நிலவரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் உத்திகள்.

எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதால் இந்தத் தேர்தல் நியாயமானது அல்ல. ஆனாலும், மக்களின் வேதனையை பிரதிபலிக்கும் காங்கிரசின் 5 நீதி, 25 உத்தரவாதங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பால், இந்தியா கூட்டணி பெரும்பான்மை வெற்றியை பெறும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரச்சனைகளை திசைதிருப்பும் முயற்சி: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,General Secretary ,Jairam Ramesh ,Modi ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...